Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM

ஊரக உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரத்துக்கு கூடுதல் பொறுப்பாளர்கள் : அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு :

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன், மைதிலி திருநாவுக்கரசு மற்றும் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோரை கூடுதலாக நியமித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்.6, 9 ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் கூடுதலாக, அமைப்பு செயலாளர்களான மைதிலி திருநாவுக்கரசு, வாலாஜாபாத் பா.கணேசன் ஆகிய 2 முன்னாள் எம்எல்ஏக்களும் நியமிக்கப்படுகின்றனர். அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணி பொறுப்பாளர்களுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணிகளை ஆற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் அறிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x