Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM
தமிழகத்தில் நேற்று ஆண்கள்1,004, பெண்கள் 693 என மொத்தம்1,697 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கர்நாடகாவில் இருந்து வந்தஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 232, கோவையில் 215, ஈரோட்டில் 131, செங்கல்பட்டில் 114, தஞ்சாவூரில் 103 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்து 45,380-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 25 லட்சத்து 93,074 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 16,969 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசுமற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று 27 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக கோவையில் 4 பேர் இறந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT