Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM

நாட்டில் புதிதாக 35,662 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று :

புதுடெல்லி

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரம் வருமாறு:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 35,662 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது முந்தைய நாளை விட 1,259 கூடுதல் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 281 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 44,529 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3 லட்சத்து 40,639 பேர் சிகிச்சையில் உள்ளனர். குணம் அடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 26 லட்சத்து 32,222 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை இல்லாத அளவில்கடந்த 24 மணி நேரத்தில் 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. நாடு முழு வதும் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ்கள் எண்ணிக்கை 79.42 கோடியை கடந்துள்ளது.

வாராந்திர பாசிட்டிவ் 2.02 சதவீதமாக உள்ளது. கடந்த கடந்த 85 நாட்களாக 3 சதவீதத்துக்கு குறைவாக உள்ளது.

இவ்வாறு அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி 20 லட்சத்தை கடந்தது. அதன்பிறகு அக்டோபர் 11-ல் 70 லட்சம், அக்டோபர் 29-ல் 80 லட்சம், நவம்பர் 20-ல் 90 லட்சம் என கடந்து டிசம்பர் 19-ல் 1 கோடியை கடந்தது. இந்த ஆண்டு மே 4-ம் தேதி 2 கோடியையும், ஜூன் 23-ல் 3 கோடியையும் கடந்தது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x