Published : 19 Sep 2021 03:15 AM
Last Updated : 19 Sep 2021 03:15 AM
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஊருணியில் கவிழ்ந்து மூழ்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரை செல்லூர் அக்ர ஹாரம் திருவாப்புடையார் காம்ப வுண்ட்டைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அரவிந்த்குமார் (27), அதே பகுதி இந்திரா நகரைச் சேர்ந்த அலாவுதீன் மகன் சித்திக்ராஜா (28) மற்றும் செல்லூரைச் சேர்ந்த வேல்பாண்டியன் (27), வீரபாண்டி (27), முத்துப்பாண்டி (25) ஆகிய 5 பேர் அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டியில் முல்லை பெரியாறு கால்வாயில் குளிப்பதற் காக நேற்று காரில் சென்றனர்.
காரை வேல்பாண்டியன் ஓட்டி னார். கால்வாயில் குளித்து விட்டு நேற்று மதியம் காரில் செல்லூருக்கு திரும்பினர். வழி யில் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறி கூம்பூர் குண்டூ ருணியில் பாய்ந்ததில் நீரில் மூழ்கியது. தகவலறிந்து வந்த அலங்காநல்லூர் போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் நீரில் மூழ்கிய காரை ஜேசிபி மூலம் மீட்டனர்.
அப்போது காரில் இருந்த அரவிந்த் குமார், சித்திக்ராஜா ஆகிய இருவரும் நீரில் மூழ்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர். படுகாயமடைந்த வேல்பாண்டியன் (27), வீரபாண்டி (27), முத்துப் பாண்டி (25) ஆகியோரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT