Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM
கோவை ஆலாந்துறை அருகே யுள்ள விராலியூரைச் சேர்ந்தவர் சின்னசாமி(63). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத் துக்குட்பட்ட ஆட்டுக்காரன் கோயில் மலையடிவாரத்தில் உள்ளது. சின்னசாமி நேற்று முன்தினம் இரவு தோட்டத்து வீட்டு முன்பு கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 1.30 மணியளவில் தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, சின்னசாமியை தாக்கி தூக்கி வீசிவிட்டு சென்றது. பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, சின்னசாமி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலாந்துறை போலீஸார் மற்றும் போளுவாம்பட்டி வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை யில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT