Published : 17 Sep 2021 03:11 AM
Last Updated : 17 Sep 2021 03:11 AM

சுகாதாரமான பிரசாதம் தயார் செய்யும் - கள்ளழகர், முருகன் கோயில்களுக்கு மத்திய அரசின் உணவு தரச்சான்று :

மாநில அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் மதுரை மாவட்ட அளவிலான வழிகாட்டு தல் குழுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அழகர்கோவில் கள்ளழகர் கோயில், சோலைமலை முருகன் கோயில்களில் சுகாதாரமான பிரசாதம், அன்னதானம், பிரசாத விற்பனை என பல கட்ட ஆய்வுகளின் முடிவில் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் துறை கள்ளழகர் கோயில், சோலைமலை முருகன் கோயில்களுக்கு தனித் தனியாகத் தரச்சான்று வழங்கியுள்ளது.

இதற்கான சான்றிதழ்களை ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், கோயில் கண்காணிப்பாளர் நாராயணியிடம் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x