Published : 16 Sep 2021 03:11 AM
Last Updated : 16 Sep 2021 03:11 AM

பெங்களூரு விபத்து தமிழகத்தை சேர்ந்த இருவர் பலி :

சென்னையை சேர்ந்த பிரீத்தம் குமார் (30) பெங்களூரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடன் பணியாற்றும் ஷ்ருத்திகா ராமன் (28) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் அவர்கள் மீது வேகமாக மோதியது.

இதனால் பிரீத்தம் குமாரும், ஷ்ருத்திகா ராமனும் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x