Published : 16 Sep 2021 03:11 AM
Last Updated : 16 Sep 2021 03:11 AM

கரோனா காலத்தில் கீழமை நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் 4 கோடியை கடந்தது :

புதுடெல்லி: கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 3.2 கோடி வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த வழக்குகளின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 4 கோடியே 25,060 ஆக உயர்ந்துள்ளது. கீழமை நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை முதல்முறையாக 4 கோடியை கடந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மட்டும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 60,600 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இது தற்போது 70 ஆயிரமாக உயர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றம், 12 உயர் நீதிமன்றங்கள் உட்பட நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3.7 கோடி வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவை தற்போது 4.6 கோடியாக உயர்ந்துள்ளன. அதாவது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 1 கோடி வழக்குகள் சேர்ந்துள்ளன. பொதுமுடக்க தொடக்கத்தில் பல மாநிலங்களில் உள்ள பார் அசோசியேஷன்களிடம் ஒருவித தயக்கம் இருந்ததால் அவர்கள் மின்னணு நீதிமன்றங்கள் மற்றும் டிஜிட்டல் விசாரணையை ஏற்க மறுத்தனர். மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 24,490 நீதிபதி பணியிடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 19,367 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x