Published : 16 Sep 2021 03:12 AM
Last Updated : 16 Sep 2021 03:12 AM
விதிமுறைப்படி வீடுகளுக்கு மின் பயன்பாட்டைக் கணக்கிடாததால் பாதிப்பு ஏற்படுவதாக நுகர்வோர் அளித்த புகாரின் பேரில், மின்வாரிய கணக்கீட்டு ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மின் வாரியத்தில், மதுரவாயல் தெற்குப் பிரிவு அண்ணாநகர் கோட்டம் மேற்கில் கணக்கீட்டு ஆய்வாளராக பணிபுரியும் ஜெயவேலு என்ற ஊழியர், தனது கணக்கீட்டுப் பணியை விதிமுறைப்படி சரியாக செய்யாததால், மின்நுகர்வோர் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, நடத்தப்பட்ட கள ஆய்வில், அவர் மீது சுமத்தப்பட்ட புகார் உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கணக்கீட்டுப் பணியில் உள்ள பணியாளர்கள் தங்களது கணக்கீட்டுப் பணியை தவறில்லாமல் சரியாக செய்து மின் நுகர்வோர் பாதிப்படையாத வண்ணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT