Published : 16 Sep 2021 03:12 AM
Last Updated : 16 Sep 2021 03:12 AM

பாமக முடிவால் வருத்தம் இல்லை செல்லூர் கே.ராஜூ பேட்டி :

மதுரை

பாமக தனித்து போட்டியிடுவதால் வருத்தம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றி அதிமுக செயல்படுகிறது. திமுகவின் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

உதயநிதி, கனி மொழி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னதுபோல நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யாததற்கு தமிழக அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். அதற்கு காரணங்களை அடுக்கி மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றக்கூடாது.

கூட்டணி என்பது தோளில் அணியும் துண்டு போன்றது. துண்டை தேவை யென்றால் தோளில் போட்டுக் கொள்ளலாம். தேவையில்லையென்றால் கழட்டி வைத்துக் கொள்ளலாம்.

அதிமுக எந்தவொரு கால கட்டத்திலும் கூட் டணியை நம்பி இருந்ததில்லை. கூட் டணி என்பது சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களில்தான் எடுபடும். உள்ளாட்சித் தேர்தல் என்பது அந்தந்த பகுதியில் உள்ள செல்வாக்கைப் பொறுத்து அமையும். எனவே, பாமக தனித்துப் போட்டியிடுவதால் வருத்தம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x