Published : 16 Sep 2021 03:14 AM
Last Updated : 16 Sep 2021 03:14 AM
ஜோலார்பேட்டை: வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விரைவு ரயில்களில் வெளிமாநில மதுபாட்டில்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலின் பேரில், ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் பெங்களூருவில் இருந்து சென்னை வரை செல்லும் பிருந்தாவன் விரைவு ரயிலில் நேற்று சோதனை நடத்தினர்.
அப்போது, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிகள் இருக்கை அடியில் 6 ஆயிரம் லிட்டர் கொண்ட மதுபாட்டில்கள் பதுக்கி கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து, ரயில்வே காவல் துறையினர் அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT