Published : 16 Sep 2021 03:14 AM
Last Updated : 16 Sep 2021 03:14 AM
செங்கம்: செங்கத்தில் நடைபெற்ற வருவாய்த்துறை சிறப்பு முகாமில் 450-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
செங்கத்தில் பொதுமக்களிடம் இருந்து அரசின் உதவித் தொகை கோரி மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இடர்பாடு நிவாரண வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 450-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதில் பங்கேற்ற பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்துள்ளனர். இந்த மனுக்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து கள ஆய்வு செய்யப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT