Published : 15 Sep 2021 03:10 AM
Last Updated : 15 Sep 2021 03:10 AM
தமிழகத்தில் நேற்று ஆண்கள்901, பெண்கள் 690 என மொத்தம் 1,591 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
அதிகபட்சமாக சென்னையில் 212, கோவையில் 201, ஈரோட்டில்128, தஞ்சாவூரில் 119, செங்கல்பட்டில் 116 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 16,549 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 27 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில்கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,217 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT