Published : 15 Sep 2021 03:10 AM
Last Updated : 15 Sep 2021 03:10 AM

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு - 17-ம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் :

கடந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை தாங்கள் படித்த பள்ளியில் வரும் 17-ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழை 17-ம் தேதி முதல் அந்தந்த பள்ளியிலேயே பெற்றுக் கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ள பள்ளிக்கு வரும் மாணவர்களும், பெற்றோரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x