Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM

தேமுதிக 17-ம் ஆண்டு தொடக்க விழா : பிரேமலதா கட்சி கொடியேற்றினார்

சென்னை

தேமுதிகவின் 17-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடி ஏற்றினார்.

தேமுதிக தொடங்கப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்து 17-ம் ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பொருளாளர் பிரேமலதா, நேற்று கொடியேற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தேமுதிக துணைச் செயலாளர்கள் எல்.கே. சுதீஷ், பார்த்தசாரதி உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதேபோல், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் 17-ம் ஆண்டு தொடக்க விழாவை கட்சிக் கொடி ஏற்றிவைத்து கொண்டாடினர். சில இடங்களில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘தோல்வி என்பது சறுக்கல்தானே தவிர, வீழ்ச்சி அல்ல.வரும் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக பலத்தை அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம். அடுத்தடுத்து நடக்கவுள்ள தேர்தல்களில் தேமுதிக மீண்டும் எழுச்சி பெறும். நல்லவர் லட்சியம் வெல்லும் நிச்சயம் என்று உறுதியோடு நாம் அனைவரும் பயணிப்போம்’ என தெரிவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x