Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM
புதுச்சேரி முழுவதும் பள்ளி, கல்லூரிகள் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் கரோனா காரணமாக கடந்த 19 மாதங்களாக மூடப்பட்டுள்ள புதுச்சேரி மத்தியபல்கலைக்கழகம் திறக்கப்பட வில்லை. பல்கலைக்கழகத்தை உடனடியாக திறக்கக் கோரி மத்திய பல்கலைக்கழக இந்திய மாணவர் சங்கம் கிளைசார்பாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாண வர்கள் திரளான பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர், “19 மாதங்களாக மூடியுள்ள பல்கலைக்கழகத்தை உடனே திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்” என்று குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT