Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணைஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:
விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி குழுவார்டு உறுப்பினர், ஊராட்சிஒன்றியக் குழு வார்டு உறுப்பினர்ஆகிய பதவிகளுக்கு அதிமுகசார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் உறுப்பி னர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதன்படி, மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினருக்கு ரூ,5 ஆயிரமும், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினருக்கு ரூ.3 ஆயிரமும் மாவட்ட கழக அலுவலகங்களில் செலுத்தி விருப்ப மனு விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
அதேபோல, ஏற்கெனவே விருப்ப மனு அளித்திருந்த உறுப்பினர்கள் அதற்கான அசல் ரசீது மற்றும் நகலினை சமர்ப்பித்து கட்டணம் இல்லாமல் விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம். விருப்ப மனு பெறுவது சம்பந்தமான விவரங்களை உறுப்பினர்கள் அறிந்து கொள்ள மாவட்டச் செய லாளர்கள் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT