Published : 12 Sep 2021 03:21 AM
Last Updated : 12 Sep 2021 03:21 AM

ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம் :

திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள்.

திருவண்ணாமலை

நேரு யுவகேந்திரா சார்பில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி ’ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம்’ திருவண்ணாமலையில் நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல முதுநிலை மேலாளர் பெரியகருப்பன் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் நான்சி வரவேற்றார். ஈசான்ய மைதானத்தில் இருந்து ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம் புறப்பட்டது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கிருபாநிதி தொடங்கி வைத்தார். வேலூர் சாலை வழியாக, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவு பெற்றது. இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். முன்னதாக உடல் ஆரோக்கியத்துக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. முடிவில், நேரு யுவகேந்திரா அலுவலக கணக்காளர் கண்ணகி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x