Published : 09 Sep 2021 03:13 AM
Last Updated : 09 Sep 2021 03:13 AM
தமிழகத்தில் நேற்று புதிதாக 1,587பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதியவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் நேற்று ஆண்கள்889, பெண்கள் 698 என மொத்தம் 1,587 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 232,சென்னையில் 179, ஈரோட்டில் 117,செங்கல்பட்டில் 115 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 16,180 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் முதியோர் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை35,073 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,418 பேர்இறந்துள்ளனர் என்று தமிழகசுகாதாரத் துறை கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT