Published : 07 Sep 2021 03:13 AM
Last Updated : 07 Sep 2021 03:13 AM
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 38,948 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:
நாட்டில் கடந்த திங்கட்கிழமை மட்டும் புதிதாக 38,948 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஒரு வாரத்தில் மிகவும் குறைந்த எண்ணிக்கையாகும். கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதிதான் 30,941 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அதன்பிறகு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நாட்டில் கரோனாவால் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 3.30 கோடி யாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 26,701 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
மேலும், கரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 219 பேர் இறந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து உயிரிழப்பு 4.40 லட்சமாக அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 4.04 லட்சம் பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 1.24 சதவீதமாகும். அதேநேரத்தில் குணமடைவோர் சதவீதம் 97.42 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவரை 3.21 கோடி பேர் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் இதுவரை நாடு முழுவதும் 68.46 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT