Published : 05 Sep 2021 03:16 AM
Last Updated : 05 Sep 2021 03:16 AM
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.352 உயர்ந்து, ரூ.35 ஆயிரத்து 968-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு மக்கள் வழக்கம்போல வெளியே செல்லத் தொடங்கிவிட்டனர். இதேபோல, பெரும்பாலான நிறுவனங்கள், தொழிற்சாலைகளும் செயல்படத் தொடங்கிஉள்ளன.
தேவையின் அடிப்படையில் சர்வதேச அளவில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும், தங்கம் சார்ந்த பங்குச் சந்தை முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன.
இதனால், தங்கம் விலை மீண்டும் ரூ.36 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.352 உயர்ந்து, ரூ.35 ஆயிரத்து 968-க்கு விற்கப்பட்டது.
22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 496-க்கு விற்பனை ஆனது. இதுவே நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 452-க்கு விற்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT