Published : 30 Aug 2021 03:13 AM
Last Updated : 30 Aug 2021 03:13 AM
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் அயோத்யாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று வருகை தந்தார். அயோத்யாவில் நேற்று ராமாயணம் குறித்த கருத்தரங்கை மாநாட்டை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:
ராமர் பிறந்ததால் அயோத்தி புண்ணியபூமியாக விளங்குகிறது. ராமர் இல்லாவிட்டால் அயோத்தி இல்லை. ராமர் இருந்ததால்தான் இன்றும் அயோத்தி புகழ்பெற்று விளங்குகிறது. இந்த நகரில் ராமர் நிரந்தரமாக வாழ்கிறார் என்ற நம்பிக்கை நம்மிடையே உள்ளது. ராமர் மீது வைத்திருந்த பக்தியாலும், அவர் மீதுள்ள மரியாதையாலும் எனக்கு இந்தப் பெயரை எனது குடும்பத்தார் வைத்திருப்பார்கள் என்று நான் எண்ணுகிறேன். பழங்குடியின மக்கள் மீது அதீத அன்பைப் பொழிந்தார் ராமர். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியின்போது ராமாயண மாநாடு தொடர்பான தபால் உறையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். நிகழ்ச்சியில் உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுர்யா, தினேஷ் சர்மா, மத்திய ரயில்வே இணை அமைச்சர் விக்ரம் ஜர்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT