Published : 28 Aug 2021 03:15 AM
Last Updated : 28 Aug 2021 03:15 AM
திருச்சி: திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.காமராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவப் பிரிவில் செப்.1-ம் தேதி முதல் காலை 9 மணி முதல் 10 மணி வரை இலவச யோகா பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சியில் யோகா, ஆசனங்கள், பிரணாயாமம், மூச்சுப் பயிற்சி, தியானப் பயிற்சி, உடலையும், மனதின் இறுக்கத்தையும் தளர்த்தும் பயிற்சிகள், கண் பயிற்சி உள்ளிட்டவை கற்றுத் தரப்படும்.
பயிற்சிக்கு வருவோர் 10 நிமிடம் முன்னதாக வர வேண்டும். உணவு மற்றும் மருந்துகள் உட்கொள்வோர் முன்னதாக உணவருந்தி, மருந்துகளையும் உட்கொண்டு வர வேண்டும். யோகா செய்வதற்கு ஏற்ற உடை அணிந்து வர வேண்டும். இந்த பயிற்சி திங்கள் முதல் சனிக்கிழமை வரை நடைபெறும். யோகா பயிற்சிக்கு வரும் போது அனைவரும் ஓ.பி. சீட்டு பெற்றுக் கொண்டு பயிற்சியில் பங்கேற்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT