Published : 25 Aug 2021 03:18 AM
Last Updated : 25 Aug 2021 03:18 AM

கேங்மேன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் :

திருவண்ணாமலை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் தொழிலாளர்களுக்கான பயிற்சி காலத்தை 3 மாதங்களாக குறைக்க வலியுறுத்தி திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலச் செயலாளர் காங்கேயன் தலைமை வகித்தார். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், “கேங்மேன் பயிற்சி காலத்தை 3 மாதங்களாக குறைக்க வேண்டும், சொந்த ஊர்களுக்கு பணிமாறுதல் வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு மற்றும் காப்பீட்டை உறுதி செய்ய வேண்டும், விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும், கல்வி தகுதியின் அடிப்படையில் உள்முக தேர்வில் வாய்ப்பு வழங்கி பதவி உயர்வு அளிக்க வேண்டும்“ ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.

இதில், மண்டலச் செயலாளர் சிவராஜ், வட்டச் செயலாளர் பாலாஜி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x