Published : 23 Aug 2021 03:14 AM
Last Updated : 23 Aug 2021 03:14 AM
கொடைக்கானலில் கரோனா இரண்டாவது அலை பரவுவதைத் தவிர்க்க சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடவும், படகு சவாரிக்கும் கடந்த ஏப்ரல் முதல் தடை விதிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதித்த போதிலும் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படவில்லை. இதனால் மலைக்கிராமப் பகுதிகளுக்குச் சென்று இயற்கை எழிலை மட்டும் சுற்றுலாப் பயணிகள் ரசித்துச் சென்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு தளர்வுகளை அறிவித்து சுற்றுலாத் தலங்களை திறக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி கொடைக்கானல் படகு குழாம் இன்று முதல் செயல்படவுள்ளது. சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான படகு குழாம்கள், படகுகள் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை சுற்றுலாத் துறையினர் நேற்று மேற்கொண்டனர்.
இதுகுறித்து படகு குழாம் மேலாளர் அன்பு கூறுகையில், அரசின் உத்தரவையடுத்து கொடைக் கானல் ஏரியில் சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான இரண்டு படகுகளிலும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து படகுகள் இயங்காமல் இருந்ததால் ஏதேனும் பாதிப்புகள் உள்ளனவா எனக் கண்டறிய படகுகள் வெள்ளோட்டம் விட்டு சரி பார்க்கப்பட்டன . தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை படகுகள் இயக்கப் படும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT