Last Updated : 22 Aug, 2021 03:12 AM

 

Published : 22 Aug 2021 03:12 AM
Last Updated : 22 Aug 2021 03:12 AM

கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு :

கர்நாடக முதல்வர் பசவராஜ்பொம்மை நேற்று பெங்களூரு வில் கூறியதாவது:

கர்நாடகாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கட்டுப் பாட்டில் உள்ளது. தொற்றின் 3-வது அலை கர்நாடகாவில் இன்னும் உருவாகவில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே கரோனா கட்டுப்பாடு மற்றும் தடுப்புக் குழு நிபுணர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசித்து பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி வரும் திங்கட்கிழமை (ஆக. 23) 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படுகிறது. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும். பள்ளியில் அனைத்து ஆசியர்களும் ஊழியர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி தெளிப்பு,சமூக இடைவெளி, தூய்மைபராமரிப்பு உள்ளிட்ட விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. பெற்றோரின் அனுமதி கடிதம் கொண்டுவரும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக் கப்படுவார்கள். மாணவர் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும். பள்ளிகளுக்கு வர இயலாத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x