Published : 22 Aug 2021 03:13 AM
Last Updated : 22 Aug 2021 03:13 AM

சாராயம் காய்ச்சிய பெண் கைது :

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே செண்பகப்பாளையம் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின்பேரில், ஊதியூர் போலீஸார் சென்று சோதனை மேற்கொண்டனர். இதில், சரஸ்வதி (49) என்பவர் வீட்டில் சாராயம் காய்ச்சுவது உறுதிசெய்யப்பட்டது. அங்கிருந்து 4 லிட்டர் சாராயம், 3 லிட்டர் சாராய ஊறல், காய்ச்சுவதற்காக பயன்படுத்திய குக்கர் உள்ளிட்ட பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைதுசெய்யப்பட்ட சரஸ்வதி, சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x