Published : 22 Aug 2021 03:13 AM
Last Updated : 22 Aug 2021 03:13 AM

ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு :

திருப்பூர்:பூலித்தேவனின் படைத் தளபதியாக விளங்கி, ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்த ஒண்டிவீரனின் 250-வது நினைவு தினம், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கன்னிமார்தோட்டம் தெற்கு வீதியில் தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

சங்கத் தலைவர் எழுத்தாளர் மதிவண்ணன் தலைமை வகித்தார்.

மாநிலப் பொருளாளர் தமிழ்மணி, துணைப் பொதுச் செயலாளர் வீரத் தமிழன், மதிமுக மாவட்ட தொழிற்சங்கச் செயலாளர் கா. குமார் உட்பட பலர் பங்கேற்றனர். பெருமாநல்லூர் ஊராட்சியில் பணிபுரியும் 20-க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x