Published : 15 Aug 2021 03:24 AM
Last Updated : 15 Aug 2021 03:24 AM

ஜனநாயக கோயில் நாடாளுமன்றம் : குடியரசுத் தலைவர் ராம்நாத் உரை

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு 7 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது:

கடந்த ஆண்டைப் போலவேஇந்த ஆண்டும் கரோனா பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசுக்கு பொதுமக்கள் உதவ வேண்டும்.

நாடு 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் விவசாயிகள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். அன்னமிடும் விவசாயிகளுக்கு உதவி செய்ய அரசு காத்திருக்கிறது. இந்தியா சுதந்திரம்பெற்றபோது இந்தியாவில் ஜனநாயகம் தழைக்காது என்று சிலர்கூறினர். ஆனால் இந்திய மக்கள்மிகவும் பலமான ஜனநாயகத்தைஉருவாக்கியுள்ளனர்.

நமது நாடாளுமன்றமானது ஜனநாயகத்தின் கோயிலாகத் திகழ்கிறது. மக்களின் நலனுக்காக பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கவும், அலசி ஆராயவும், முடிவெடுக்கக் கூடிய இடமாக நாடாளுமன்றம் இருக்கிறது. எனவே, நாடாளுமன்றத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறந்த முறையில் செயலாற்றிய நமது வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x