Published : 05 Aug 2021 03:16 AM
Last Updated : 05 Aug 2021 03:16 AM

பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட - சிறுமியின் குடும்பத்தை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் :

டெல்லியின் தென்மேற்கு பகுதியில் மின் மயானம் உள்ளது. அதன் அருகில் தலித் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 9 வயது தலித் சிறுமி ஒருத்தி, மின் மயானத்தில் உள்ள கூலரில் இருந்து தண்ணீர் கொண்டு வர சென்றிருக்கிறார்.

அரை மணி நேரத்துக்குப் பிறகு மின் மயானத்தின் பூசாரி ராதே ஷியாம் (55) மற்றும் இரண்டு மூன்று பேர் பதற்றத்துடன் அந்தச் சிறுமியின் தாயை வரவழைத்துள்ளனர். பின்னர், அங்கு சிறுமியின் கருகி போன உடலை காட்டியுள்ளனர். தண்ணீர் பிடிக்கும் போது மின்சாரம் பாய்ந்து சிறுமி இறந்ததாக கூறியுள்ளனர். ஆனால், சிறுமியை பலாத்காரம் செய்து வலுக்கட்டாயமாக எரித்து கொன்றதாக தாய் புகார் அளித்தார். தலித் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து, ராதே ஷியாம் மற்றும் மின் மயான ஊழியர்கள் குல்தீப் குமார் (63), லட்சுமி நாராயன் (48), முகமது சலீம் (49) ஆகியோரை போலீஸார் கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சிறுமியின் குடும்பத்தாரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில்,‘‘ சிறுமியின் குடும்பத்தினர் நீதி கேட்கிறார்கள், அவ்வளவுதான். அவர்களுக்கு நீதி கிடைக்க ஆதரவாக இருப்பேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x