Published : 04 Aug 2021 03:19 AM
Last Updated : 04 Aug 2021 03:19 AM
நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 30,549 ஆக குறைந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் இடம்பெற்றுள்ள தகவல் வருமாறு:
நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 30,549 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 422 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.04 லட்சமாக குறைந்துள்ளது. தினசரி கரோனா தொற்று உறுதியாவதில் 13,984 பேருடன் கேரளா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
நாடு முழுவதும் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.17 கோடியாகவும் உயிரிழப்பு 4.25 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 97.38 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் 16.49 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை 47.12 கோடியாக அதிகரித்துள்ளது. தினசரி தொற்று விகிதம்1.85 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT