Published : 04 Aug 2021 03:20 AM
Last Updated : 04 Aug 2021 03:20 AM
தாம்பரம் கோட்டம் செம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இங்கு வீடுகளுக்கு சென்று முறையாக மின் கணக்கீடு செய்யப்படுவதில்லை. இங்கு பணிபுரியும் மின் கணக்கீட்டாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு நேரம் கிடைக்கும்போது மட்டுமே சென்று மின் கணக்கீடு செய்து வந்தனர். இது தொடர்பாக மின்வாரியத்துக்கு தொடர் புகார்கள் வந்தன.
இதையடுத்து உயர் அதிகாரிகள் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அவர்கள் தொடர்ந்து தங்கள் இஷ்டம் போல செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில் மின் கணக்கீட்டாளர்கள் பாஸ்கர், திருப்பதி மற்றும் கணக்கீட்டு ஆய்வாளர் மேகலா ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து வீடுகளுக்கும் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், இடைநீக்கம் செய்யப்பட்ட மூவரும் பணியை சரிவர செய்யவில்லை. பொதுமக்களிடம் இருந்து வந்த தொடர் புகார்களின் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தாம்பரம் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT