Published : 04 Aug 2021 03:23 AM
Last Updated : 04 Aug 2021 03:23 AM

ரயிலில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு :

ஜோலார்பேட்டை

குடியாத்தம் அருகே தண்ட வாளத்தை கடக்க முயன்ற இளைஞர் ரயிலில் சிக்கி உயிரி ழந்தார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணா மூர்த்தி. இவரது மகன் விஜய் (21). சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த விஜய் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில், மேல்பட்டி - வளத்தூர் இடையேயுள்ள தண்டவாளத்தை விஜய் நேற்று முன்தினம் இரவு கடக்க முயன்றார்.

அப்போது, அவ் வழியாக வந்த விரைவு ரயிலில் அவர் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜோலார் பேட்டை ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x