Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM

திருவான்மியூர் -கரும்பாக்கம் இடையே மாநகர பேருந்து சேவை மீண்டும் தொடக்கம் :

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கரும்பாக்கம் முதல் திருவான்மியூர் வரை இயக்கப்பட்டு வந்த மாநகரப் பேருந்து சேவை, கரோனா தொற்று காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது.

தொற்று குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும் இந்தப் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் மேற்கண்ட வழித்தடத்தில் மீண்டும் மாநகர பேருந்தை தொடங்க வேண்டும் என எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதன்பேரில், மேற்கண்ட பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரிடம் சட்டப்பேரவை உறுப்பினர் பாலாஜி வலியுறுத்தினார்.

இந்நிலையில், திருவான்மியூர்-கரும்பாக்கம் இடையே மாநகரப் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x