Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற - பி.வி.சிந்துவுக்கு ஆளுநர், கட்சித் தலைவர்கள் வாழ்த்து :

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்குஆளுநர் பன்வாரிலால் புரோஹித்மற்றும் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகள்:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தான் ஒரு மிகச் சிறந்த பேட்மிட்டன் வீராங்கனை என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார். பி.வி.சிந்துவால் ஒட்டு மொத்த தேசமும் பெருமை கொள்கிறது.

இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்று சாதனையின் மூலம் பி.வி.சிந்துநாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார். அவருடைய சாதனை விளையாட்டு வீரர்களுக்கு ஒலிம்பிக் போட்டிகளில் நாட்டுக்காக பதக்கங்களை வெல்ல ஊக்கத்தை அளிக்கும்.

நாட்டுக்கு பெருமை

இந்த வரலாற்று சாதனைக்காக பி.வி.சிந்துவின் பெற்றோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பி.வி.சிந்து தொடர்ந்து, நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும். எதிர்காலத்தில் அவர் எடுக்க கூடிய முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம். நாட்டுக்கு பெருமை தேடித் தரும் பி.வி.சிந்து மேலும் பல சாதனைகள் படைத்து வெற்றி பெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்: ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது ஒரு சாதனை. பதக்கம் வெல்வது பெரும் சாதனை. இரண்டு முறை பதக்கம் வெல்வது வரலாற்று சாதனை. புதிய வரலாறைப் படைத்த வீரமங்கை பி.வி.சிந்து,இந்திய பெண்களின் பெருமிதமாக திகழ்கிறார். அவரை மனதார வாழ்த்துகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x