Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர - 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பம் :

சென்னை

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவில் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்து உயர்கல்வித் துறைமூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் 143 அரசுகலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் மொத்தம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன. கடந்தஆண்டு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டில், பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டைவிட விண்ணப்பம் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதுபோலவே, தற்போது 2 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில், 1.50 லட்சம் மாணவர்கள் தங்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர். இணைய வழியில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அருகே இருக்கும்அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை உதவி மையத்தை அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x