Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 03:15 AM

ஆட்சியர், ஆணையர் இணைந்து கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் :

கரோனா விழிப்புணர்வு பிரச்சார வாரத்தை முன்னிட்டு, கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் பொதுமக்களிடம் கரோனா தொற்று பாதிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். பேருந்துகளில் ஏறி பயணிகளிடமும், பேருந்து நிலைய கடைகளிலும் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் பயணிகள் கரோனா தொற்று பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகித்தல், குறும்படம் தயாரித்தல், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, விழிப்புணர்வு வாசகம் எழுதுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் வரும் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது” என்றார்.

மாநகராட்சி நகர் நல அலுவலர் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x