Published : 02 Aug 2021 03:16 AM
Last Updated : 02 Aug 2021 03:16 AM

பாதுகாப்பான குடிநீர் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல் :

தருமபுரி மாவட்ட மக்களுக்கு புளோரைடு பாதிப்பு இல்லாத பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் அரசியல் விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் குமார் அறிக்கை சமர்ப்பித்தார்.கூட்டத்தில், ‘தமிழகத்தில் கரோனா தொற்று 3-ம் அலை வரலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிப்பதை கருத்தில் கொண்டு தருமபுரி மாவட்டத்தில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தின் அனைத்து பகுதியில் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். இந்த முகாம்கள் குறித்து ஊடகங்கள் மூலம் முன்னறிவிப்பு வெளியிட வேண்டும்.

வறட்சி மாவட்டமான தருமபுரியில் நீர்நிலைகளை மேம்படுத்தவும், காவிரி, தென்பெண்ணை ஆறுகளின் உபரிநீரை நீர்நிலைகளுக்கு வழங்கவும் தேவையான திட்டங்களை நிறைவேற்ற, வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டும். புளோரைடு பாதிப்பு இல்லாத பாதுகாக்கப்பட்ட குடிநீரை அனைத்து கிராமங்களுக்கும் வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிர்வாகம் உடனே நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும்.கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடி சங்கரய்யா நூற்றாண்டு விழாவை தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாகக் கொண்டாடுவது’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x