Published : 01 Aug 2021 06:29 AM
Last Updated : 01 Aug 2021 06:29 AM

24 மணி நேரத்தில் 41,649 பேருக்கு கரோனா தொற்று :

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 41,649 பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றுமுன்தினத்தை விட 2,500 குறைவாகும். நாடு முழுவதும் 4 லட்சத்து 8,920 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஒட்டுமொத்த பாதிப்பில் 1.29 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 593 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை 4 லட்சத்து 23,810 பர் கரோனா பாதிப்பால் இறந்துள்ளனர். அதேவேளையில் குணமடை வோர் எண்ணிக்கை 97.37 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 37,291 பேர் குணமடைந்துள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x