Published : 01 Aug 2021 06:30 AM
Last Updated : 01 Aug 2021 06:30 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

உத்திரமேரூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி அமைப்பினர்.

உத்திரமேரூர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து உத்திரமேரூரில் மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்திரமேரூரில் நடைபெற்றஆர்ப்பாட்டத்தில் அமைப்பின்நிர்வாகி செல்வசேகர், மாநிலஅமைப்பாளர் டேவிட் செல்லப்பா, மாவட்ட அமைப்பாளர் ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பில் சமையல் செய்வது போன்றும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை உயர்வதாகவும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான மத்திய, மாநில அரசுகள் அளவுக்கு அதிகமான வரி விதிப்பைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x