Published : 01 Aug 2021 06:31 AM
Last Updated : 01 Aug 2021 06:31 AM

திருச்சி என்ஐடி துணை இயக்குநருக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு :

திருச்சி: திருச்சி துவாக்குடியில் உள்ள என்ஐடியில் துணை இயக்குநராக பணியாற்றி வருபவர் உமாபதி. இவரிடம் நேற்று தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம் தொடர்பான கோரிக்கை குறித்து சுந்தரவேல் என்ற ஊழியர் பேசும்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது சுந்தரவேல் தன்னை மிரட்டி, ஜாதிப் பெயரைக் கூறி திட்டியதாக உமாபதி அளித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x