Published : 01 Aug 2021 06:32 AM
Last Updated : 01 Aug 2021 06:32 AM
அழிந்துவரும் மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக, நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி அரசூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் வளாகத்தில் கோயில் மரக்காடு உருவாக்கும் பணி நேற்று தொடங்கியது.
இதற்காக, வனம் தன்னார்வ அமைப்பு, விர்பேக் அனிமல் ஹெல்ஸ் இந்தியா நிறுவனம், திருப்புலூர் ஊராட்சி மன்றம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு, திருப்புகலூர் ஆதீனம் ல சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை வகித்தார்.
திருப்புகலூர் ஊராட்சி மன் றத் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். ஆட்சியர் அருண் தம்புராஜ் மரக்கன்றை நட்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில், பறவைகள் விரும்பி உண்ணும் பழ மரங்களான மகிழம், வாதாம், கொடுக்காபுளி, செண்பகம், நாவல், கொய்யா உட்பட 80 வகையான 1,000 மரக்கன்றுகள் வனம் தன்னார்வ அமைப்பின் இயக்குநர் கலைமணி மற்றும் குழுவினரால் நடப் பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT