Published : 01 Aug 2021 06:32 AM
Last Updated : 01 Aug 2021 06:32 AM
குடியாத்தம் நகரில் நிதி நிறுவன மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் சந்தப்பேட்டை பஜார் வீதியில் இயங்கி வந்த ஆஷா ஜூவல்லரி என்ற நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து திரட்டிய முதலீட்டு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், நிதி நிறுவனத்தினருக்கு சொந்தமான ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்த சொத்துக்கள், குடியாத்தம் சந்தப்பேட்டையில் இயங்கி வந்த ஆஷா ஜூவல்லரி கடையை முடக்கம் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த அசல் தொகை மொத்தம் ரூ.65 லட்சத்து 92 ஆயிரத்து 662 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னி லையில் 14 முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சத்து 49 ஆயிரத்து 500 தொகை நேற்று முன்தினம் மாலை வழங்கப்பட்டது. மீதமுள்ள 57 பேரின் முதலீடு ஆவணங்களை சரிபார்த்து நிலுவைத் தொகை வழங்க பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT