Published : 31 Jul 2021 03:13 AM
Last Updated : 31 Jul 2021 03:13 AM
மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் அருகேயுள்ள, குஞ்சப்பண்ணை மாரியம்மன் கோயில் அருகே போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர். அதில் மூவரும், கஞ்சா கடத்திச் செல்வது தெரிய வந்தது.
பிடிபட்ட தீபக்குமார்(25), முகமது பிலால்(26), தீனதயாளன்(22) ஆகியோரை கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT