Published : 30 Jul 2021 03:15 AM
Last Updated : 30 Jul 2021 03:15 AM
சென்னை கொளத்தூர் - வில்லிவாக்கம் இடையே உள்ள ரயில்வே சந்திக் கடவு பகுதியில் அடிக்கடி ரயில்கள் செல்ல ஏதுவாக கேட் மூடப்படுகிறது. நீண்ட நேரத்துக்கு பிறகே அவை திறக்கப்படுகின்றன.
இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அங்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில் மாநகராட்சி சார்பில் ரூ.61 கோடியே 98 லட்சத்தில், 476.80 மீட்டர் நீளத்தில், 8.50 மீட்டர் அகலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
இப்பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் ஆய்வு செய்தார். பணிகளின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இப்பணி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்” என்றார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர்கள் எம்.எஸ்.பிரசாந்த், டி.சினேகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT