Published : 30 Jul 2021 03:16 AM
Last Updated : 30 Jul 2021 03:16 AM

பாலியல் வழக்கில் ஒருவருக்கு ஆயுள் :

மதுரை

மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார்(42). கூலித் தொழிலாளி. கடந்த 2016-ம் ஆண்டு இதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதையடுத்து ஆனந்தகுமாரை சிலைமான் போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டது. அரசு தரப்பில் ஜான்சி ராணி ஆஜரானார். விசாரணை முடிவில், ஆனந்தகுமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ராதிகா தீர்ப்பளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x