Published : 29 Jul 2021 03:13 AM
Last Updated : 29 Jul 2021 03:13 AM

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் - பிரசவத்தின்போது குழந்தைக்கு காலில் எலும்பு முறிவு : உறவினர்கள் முற்றுகை

மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா மனைவி சபரீஸ்வரி (30), இவர் கடந்த 22-ம் தேதி திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிரசவத்

திற்காக அனுமதிக்கப்பட்டார். சுகபிரசவத்திற்கான வாய்ப்பு குறைவாக இருந்ததால் பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவி லியர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது பிறந்த பெண் குழந்தைக்கு இடது காலின் தொடைபகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக குற்றம்சாட்டி நேற்று சிவாவின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட் டனர். அலட்சியமாக பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரினர்.

இத்தகவல் அறிந்த ரோஷணை போலீஸார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தை கைவிட செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x