Published : 29 Jul 2021 03:13 AM
Last Updated : 29 Jul 2021 03:13 AM

புதுச்சேரியில் 97 பேருக்கு கரோனா :

புதுச்சேரி சுகாதாரத்துறை செய லர் அருண் வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் 5,635 பேருக்கு புதிதாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 74, காரைக்கால் - 16, ஏனாம் - 2,மாஹே - 5 பேர் என மொத்தம்97 (1.72%) பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 627 பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 189 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 734 பேர் என 923 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் ஏனாமைச் சேர்ந்த 42 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,792 ஆக உயர்ந்துள்ளது. இறப்புவிகிதம் 1.49 சதவீதமாகவும் உள்ளது.புதிதாக 96 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 912 (97.75 சதவீதம்) ஆக உள்ளது.

கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள குழந்தைகளுக்கான கரோனா வார்டில் புதிதாக 7 குழந்தைகள் அனு மதிக்கப்பட்டுள்ளன. இதில்5 வயதுக்கு உட்பட்ட 2 குழந்தைகள், 5 வயதுக்கு மேற்பட்ட 2 குழந்தைகள் என 4 குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x