Published : 29 Jul 2021 03:14 AM
Last Updated : 29 Jul 2021 03:14 AM
மதுரை தானம் அறக்கட்டளை, எச்.சி.எல். பவுண்டேசன் ஆகியவை இணைந்து காமராசர் பல்கலைக்கழகத்தில் 4 ஏக்கரில் புதிதாக உருவாக்கப்படும் பசுமை வளாகத்தில் இயற்கை பாதுகாப்பு தினவிழாவை நடத்தின.
பல்கலை. துணை வேந்தர் எம்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். பொறியாளர் ஆனந்தகுமார், தனியார் கணினி நிறுவன அலுவலர் பிரபாகரன் சாமுவேல் எபினேசர், பேராசிரியர் முருகேசன் ஆகியோ ர் மரக்கன்றுகளை நட்டனர்.
இதையொட்டி அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரைப் போட்டிகளும், மதுரை நகர்ப்புற வட்டார களஞ்சிய அலுவலர்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாடித் தோட்டம் குறித்த பயிற்சிகளும் நடத்தப்பட்டன.
தானம் அறக்கட்டளை நிர்வாகிகள் லோகேஷ் , இளமுகில், நகவீர்பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தானம் அறக்கட்டளை செய்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT