Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM
குழந்தைகளுக்கு அடுத்த மாதத்தில் கரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளில் ஒன்று செலுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி 2-வதுகட்ட கிளினிக்கல் பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை முடிவடைந்தால் செம்படம்பர் முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பாஜக எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்றுநடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார். அப்போது பிரதமர் பேசும்போது, நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்த வேண்டும் எனவும், பாஜக எம்.பி.க்கள் தங்கள் தொகுதிக்கு செல்லும்போது மக்களிடையே இதுதொடர்பாக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசும்போது, நாட்டில் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT